கோபெங்கில் குறையும் வெள்ள பாதிப்பு: நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 65 ஆகக் குறைந்தது!

கோலாலம்பூர்:

பேராக் மாநிலத்தின் கோபெங், கம்போங் உலு கெருந்தும் பகுதியில் நேற்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, கோபெங் நகராட்சி மண்டப (Dewan Bandaran Gopeng) தற்காலிக நிவாரண மையத்தில் (PPS) தங்கியிருந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று மதியம் 69 இலிருந்து 65 ஆகக் குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அங்கு தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை மாறாமல் 20 ஆக நீடிக்கிறது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பத்தாங் பாடாங் மற்றும் பாகன் டத்தோ ஆகிய மாவட்டங்களைத் தவிர, பேராக் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) கணித்துள்ளது.

இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் தற்போதைக்கு ஆபத்தான எல்லையைத் தாண்டாமல், பாதுகாப்பான அளவிலேயே நீடித்து வருவதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (DID) தெரிவித்துள்ளது.a

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here