சிப்பாங், மார்ச் 12-
பணியாளர்கள் விரும்பினால் ஊதியம் இல்லா விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய நடைமுறையை ‘மாஸ்’ எனப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிநாடுகளுக்கும் உள்நாட்டுக்கும் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை படுவீழ்ச்சியடைந்து வருகிறது.
நோய்த்தாக்கம் கட்டுக்குள் வரும் வரைக்கும் அதிகமான பயணிகளை நாம் எதிர்பார்க்க முடியாது. நமது வருமானமும் குறைந்து விடும் என்பதால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 13 ஆயிரம் பணியாளர்களும் ஊதியம் இல்லா விடுமுறையை மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.