கோலதிரங்கானு, மார்ச் 12-
கார்கள் நுழைய அனுமதிக்கப்படாத விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் இடத்தில் கஞ்சில் கார் ஒன்று அத்துமீறி நுழைந்ததால பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
55 வயதான குடும்ப மாது ஒருவர் தனது காரை விமான நிலையத்தின் பயணிகள் பகுதிக்குள் ஓட்டிச் சென்றார். அவரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதைக் கண்டுபிடித்தனர். அவரிடம் பக்குவமாகப் பேசிய அதிகாரிகள் அவரை இந்த இடத்திலிருந்து அகற்றிச் சென்றனர்.