தண்டல்கள் தேவையில்லை -சார்ல்ஸ் சந்தியாகோ

தண்டல்கள் தேவையில்லை

கிள்ளான், மார்ச் 17-
கோவிட் 19 எண்ணிக்கை நாட்டின் நுழைவாயில்களின் தளர்வால் அதிகரிக்கும் சுழல் உருவாகிவிட்டது. இனியும் இது சரியான நடவடிக்கையாக இல்லாமல் இருக்க நுழைவுகள் கடுமையாக்கப் படவேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில தினங்களாக அச்சமூட்டும் வகையில் கோவிட் 19 அதிகரித்துவிட்டதை அவர் குறிப்பிட்டார். இதன் உண்மையான நிலவரம் குறித்து அறிய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். என்றாலும் இதன் உண்மைத்தன்மை மக்களுக்குகிடைத்தால்தான் அச்சம் அகலும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் 19 பாதிப்பு மிக அதிகமாகி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மலேசியா முதலிடத்தில் இருக்கிறது. ஆதலால் நுழைவாயில்கள் சரியான நடவடிக்கையை மேற்கொள்வதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here