பிரதமரின் வேண்டுகோளின்படி நாளை நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில் சென்னை கடற்கரை பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,மார்ச் 21-
கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமக் இருக்க நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே சுயஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால், மக்கள் அனைவருமே தாமாக முன் வந்து ஊரடங்கை பின்பற்ற தயாராகிவிட்டார்கள்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிமுதல் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை சென்னை மெரினா, எட்வர்ட் எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.