கோலாலம்பூர் –
உத்தரவை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். கைவிலங்குகளும் போடப்படும் என்று காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் எச்சரித்தார்.
கோவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்று மோசமடைந்து வருவது காரணமாக நாட்டில் பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவு அமலில் இருக்கிறது.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தத் தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரவையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி குழப்பத்தை ஏற்படுத்த யாரும் முயல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
உத்தரவை மீறியதற்காக இதுவரை 107 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.