ஜாகூர் பாரு, மாரச் 26-
குளுவாங் ஹாஜ்ஜா கல்சோம் மருத்துமனை கொரொனா தொற்று மருத்துவமனையாகசெயல்படும் என்று ஜோகூர் மாநில சுற்றுச்சூழல் குழுத்தலைவர் ஆர். வித்தியானந்தன் அறிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி 34 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 196 பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. இறப்பு விகிதம் ஐந்தாக இருக்கின்றன.
அவசர வழக்குகளில் அருகிலுள்ள கிளினிக்குகுகள், மருத்துவமனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலா என்றும் அவர் குறிப்பிட்டார்.





















