பெட்டாலிங் ஜெயா, மார்ச் 27-
சுங்கை சிலாங்கூர் ஆற்று நீர் தூய்மைக் கேடடைந்திருப்பதால் கட்டம் கட்டமாக மூடப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணெய்க் கலப்பால் தூய்மைக்கேட்டை அடைந்திருக்கிறது. இது பயனீட்டுக்கு ஏற்றதாக இல்லை. ஆனாலும் நீர் வழங்குதலில் இன்னும் தடை அறிவிக்கப்படவில்லை.
இதன் தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று லுவாஸ் அறிவித்திருக்கின்றது.
மேலும் விரிவான விளக்கஙகள் பெற ஆயர் சிலாங்கூரின் சமூக வலைத்தளம் முலம் அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்டுகின்றனர்.
நுகர்வோர் தண்ணீரை விவேகத்துடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.