மலாக்கா கடல் பகுதியில் அதிகரித்து வரும் மனித கடத்தல் அச்சுறுத்தல் என்கிறார் உள்துறை அமைச்சர்

இந்தோனேசியாவை உள்ளடக்கிய எல்லை தாண்டிய மனித கடத்தல் உள்ளிட்ட முறையற்ற இடம்பெயர்வு, குறிப்பாக ஜோகூர், மலாக்கா ஜலசந்தி (கடல்) வழியாக, அதிகரித்து வரும் சிக்கலான அச்சுறுத்தலாகும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். ஒரு அறிக்கையின்படி, அமலாக்க முகமைகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கடல்சார் கள விழிப்புணர்வு, கூட்டு ரோந்துகள், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை அதிகரித்துள்ளன என்று சைஃபுதீன் நசுத்தியோன் மேலும் கூறினார்.

ஜோகூர் பாருவில் உள்ள இந்தோனேசிய தூதர் சிகிட் எஸ். விடியான்டோவின் அதிகரித்து வரும் மனித கடத்தல் வழிகள், முறையற்ற இடம்பெயர்வு, எல்லை தொடர்பான மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்ததற்கு சைஃபுதீன் நசுத்தியோன் பதிலளித்தார். மலேசியாவின் சட்ட கட்டமைப்பைப் பற்றி அவர் கூறினார்: “இந்தச் சட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இலக்காகக் கொண்ட பிற சட்டங்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது, இது கடல்வழிகள், எல்லை தாண்டிய கும்பல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட நெகிழ்வான விசாரணை மற்றும் வழக்குத் தொடர அனுமதிக்கிறது.

ஊழல் குறித்த கவலைகளை எழுப்பிய சைஃபுதீன் நசுத்தியோன்  “அமலாக்கப் பணியாளர்களின் தவறான நடத்தை அல்லது ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள் அடையாளம் காணப்பட்டால், அவை புலனாய்வு, ஒழுங்கு, சட்ட வழிமுறைகள் மூலம் கையாளப்படுகின்றன.” மேலும் இந்தோனேசியாவுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வை மலேசியா வரவேற்கிறது. நாடுகடந்த குற்றவியல் கும்பல்களை அகற்றுவதில் வெளிப்படைத்தன்மை, கூட்டு பொறுப்புக்கூறல் மிக முக்கியமானவை என்பதை அங்கீகரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here