கோலாலம்பூர், மார்ச் 30-
நாட்டின் தற்போதைய சுழலில் மக்கள் ஏமாற்றப்படுகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பேரங்காடிகளில் பொருள்கள் தீர்ந்துவிட்டது என்றும். விலையேற்றம் கண்டிருப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
இவற்றிற்கு ஒரே தீர்வு சத்தமின்றி வருகைப் புரிவதுதான். இதைத்தான் பிரதமர் செய்திருக்கிறார்.
கோலாலம்பூர் பேரங்காடி ஒன்றில் , காலையிலேயே பொருள் வாங்கும் பொருட்டு களமிறங்கிய அவரை சிலர் கண்டு கொள்ளவில்லை. அவர்தான் பிரதமர் என்றும் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
பொருட்கள் வாங்குவதுபோல் வந்த அவர், பொருள்களின் விலையைக் கண்காணிக்கிறார் என்பது தெரியுமா?
நெருக்கமில்லாமல் மக்கள் இடைவெளியைக் கையாள்வது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
வாடிக்கையாளர்கள் போலவே அவரும் தள்ளுவண்டியில் பொருட்களைத் தேர்வு செய்தார். அவரின் பார்வையில் பலவற்றைப் பதிவு செய்தார்.





















