இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,ஏப்ரல் 07,
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.  இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,281-ல் இருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது.
 கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here