உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது

ஜெனீவா,ஏப்ரல் 09-

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாததால், உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. எனினும், கொரோனா தாக்கத்தின் வீரியம் குறைந்தபாடில்லை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88,441-ஐ தாண்டியது. அதேபோல், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,517,095- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 329,955- ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here