புத்ரா ஜெயா,ஏப்.10-
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒருவர் உயிரிழக்க நேர்ந்தால் பிணப்பைக்கு வெளியேதான் சடங்குகள் நடத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மிகக் குறைவான குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்க சடங்குகள் நடத்தி முடிக்கப்படும் என சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்துள்ளார்.
சர்வ சமய மன்றத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இவ்விவகாரம் தொடர்பில் முடிவு காணப்பட்டுள்ளது.
சடலம் சுற்றி வைக்கப்பட்டுள்ள பை இறுதி வரையில் திறக்க அனுமதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.