கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள அதிகரித்து வரும் வேளையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிகம் தங்கியிருக்கும் மலாயன் மென்ஷன், சிலாங்கூர் மென்ஷன் ஆகிய வட்டாரங்கள் முழு அடைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
அங்கிருப்பவர்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டதால் பலர் உணவிற்கு சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு பல தரப்பினர் பலவிதமான உதவிகளை வழங்கி வரும் வேளையில் ஜாவி உணவு வங்கி வழி அலிமாஜூ உணவகத்தின் வழி அக்குடியிருப்பாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக உரிமையாளர் டத்தோ ஹாஜி அல்ஹாஜ் ஜவஹர் அலி தெரிவித்தார்.