கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனா ஆய்வகம் அமெரிக்காவுக்கு பல முறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க, தூதரக அதிகாரிகள், 2018ஆம் ஆண்டு ஜனவரியில் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் வௌவால்களை வைத்து ஆபத்தான ஆய்வு ஒன்றை செய்து வருவதாக எச்சரித்தாக The Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
யூகங்களின் அடிப்படையில் வூஹானை இடமாக கொண்ட அமெரிக்க ஆய்வகத்திற்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உறுதிபடுத்தப்படாத தகவல். மேலும், இது வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளியேறியது தற்செயலான நிகழ்வும் அல்ல என்று மூத்த அவசர குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை நிபூணர், Gordon Chang, Fox Newsக்கு அளித்த பேட்டியில் பல சீனர்கள், வேண்டும் என்றே வைரசை பலருக்கு பரப்பியதாகவும், தற்செயலாக அந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் நம்புவதாகவும்.ஆனால், அந்த ஆய்வகம் குறிப்பிட்ட சந்தைக்கு வெகு தொலைவில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அமெரிக்க இராணுவ தலமையகம், இது ஆய்வகத்தில் இருந்து தவறுதலாக பரவியதோ, பயோ வெப்பனோ இல்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது.
விமானப்படை பிரிகே ஜெனரல் பால் பிரீட்ரிக்ஸ் இதுகுறித்து Fox Newsக்கு முன்னதாக அளித்த பேட்டியில், நோய் எப்படி பரவியது என்று கவலைப்படுவதை விட அது எப்படி குணப்படுத்தும் என்பது குறித்தே கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். பல ஆய்வாளர்கள் தொடர்ந்து கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வூஹான் நகர ஆய்வகத்திலேயே விரிவாக ஆய்வு செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.