ரவாங் சூப்பர்மார்க்கெட்டில் கொள்ளை இருவர் கைது

சூப்பர்மார்க்கெட்டில் கொள்ளை

கோம்பாக் ஏப்.20-

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது பல்பொருள் பேரங்காடியில் கொள்ளையில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராவாங்கில் உள்ள தாமான் பெர்சாத்து அருகே 30 வயதுடைய முதல் சந்தேக நபரை போலீசார் பின் தொடர்ந்தனர். என்று கோம்பாக் மாவட்ட துணை ஓ.சி.பி.டி அரிஃபாய் தாராவே தெரிவித்தார்.

சந்தேக நபர் ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக செயல்படுவதைக் கண்டனர், மேலும் அவர் போலீசைக் கவனித்தபோது தப்பி ஓட முயன்றார் .
.இரண்டாவது சந்தேகநபர், வயது 35, அவருக்காகக் காத்திருந்தார் என என்று நம்பப்படுகிறது.
.
இருவருமே வேலையற்றவர்கள் . விசாரணையில் முந்தைய குற்றப் பதிவுகளைக் கொண்டவர்கள் என்று போலீசார் கூறினர்.

கொள்ளையில் திருடப்பட்டதாக நம்பப்படும் சுமார் 2,000 வெள்ளி, பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் போலிசார் கைப்பற்றினர்.

. கும்பல் கொள்ளை, ஆயுதக் கொள்ளை ,மக்கள் நடமாட்டக் கடுப்பாட்டை மீறியது தொடர்பான குற்றப் பதிவுக்கான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here