ஜெம்புல், ஏப்.23-
அரசு நிலத்தில் அத்துமீறி நடப்பட்ட அபாயகரமான 1000 கெத்தும் செடிகள் அழிக்கப்பட்டன.இங்குள்ள பெல்டா லூய் காடுகளில் நீர் வேம்பு என அழைக்கப்படும் கெத்தும் செடிகள் நடப்பட்டிருந்தன.
காட்டில் நுழைந்த மாநில போதைப் பொருள் தடுப்பு போலீசார் சுமார் மூன்று மணி நேரங்களில் அனைத்து நீர்வேம்புச் செடிகளையும் அழித்ததாகவும் செடிகளை நட்டவர் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் ஜெம்புல் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்ரிடெண்டண்ட் முகமட் கைரில் முகமட் அரிப் தெரிவித்தார்.