அரசியலுக்கான நேரம் இப்போது இல்லை!

பெட்டாலிங் ஜெயா ஏப்.27-

ஒரு நாளைக்கு  2.4 பில்லியன்  இழப்பை எதிர்கொள்வது அரசில் அல்ல. கோவிட் -19 தொற்றுநோயை எதிர்ப்பதே தனது முழுக்கவனமாக இருக்கிறது என்று டான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறுகிறார்).

நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள அரசியல் வாதிகள் விரும்புவதாகக அவர் கூறினார்.

நான் பிரதமரானதிலிருந்து நான் அரசியல் பற்றி சிந்திக்கவில்லை. மலேசியர்களும் இப்போது இதைப்பற்றி யோசிக்கவும் விரும்பவில்லை, இன்றைய காலம் நெருக்கடியான காலம். அபாயகரமான் நோய்த்தொற்றறின் அச்சத்தில் மக்கள் இருக்கிறர்கள்
அரசாங்கம், பிரதமர் , அமைச்சரவை அமைச்சர்கள் தங்களைப் பாதிக்கும் கோவிட் 19 பிரச்சினைகளைச் சமாளிக்க என்ன செய்கிறார்கள் என்பதையே  அறிய விரும்புகிறார்கள்.

அரசியல் குறித்து கருத்துரை  தெரிவிக்காததற்கு இதுவே அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறுகிறார்.

தனது கட்சி, கூட்டணி, அரசாங்கம், கோவிட் -19 பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்பே அவரது நியாயத்தன்மைமையை விமர்சிக்கிறார் என்று மக்கள் கூறலாம்.
விளக்க சரியான நேரம் வரும்போது இதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்றார் அவர். அவர் நேற்று இரவு உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆஸ்ட்ரோ அவானி ஒளிபரப்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணைக்கான காரணமாக இல்லை என்ற விமர்சனங்களுக்கு மாறாக, அமைச்சரவை அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்றும் முஹிடீன் கூறினார்.

“MCO உடன், அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், ஆனால் வேலை சாதாரணமாக தொடர வேண்டும், அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று நான் ஒரு உத்தரவை வழங்கியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

மூத்த அமைச்சர் டத்தோஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் , சுகாதாரத்துறை தலைமை  இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோரின் தினசரி செய்தியாளர் சந்திப்புகள்  சரியான திட்டமிடலை வழங்கி வருகின்றன.  கூடல் இடைவெளி நீடித்தால் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக மலேசியா கட்டியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று பிரதமர் கூறினார்.

கோவிட் -19 பரவுவதை நிறுத்த  அரசாங்கம் மெற்கொண்ட கூடல் இடைவெளி ஆணையின் போது ​​மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் என்பதும் அறியப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கான இழப்பும் அறிந்ததுதான்.

வீழ்ச்சி மிகப்பெரியது, மலேசியர்கள் வேலை செய்யாததால் ஒரு நாளைக்கு 2.4 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.

சிறு வணிகங்கள் (எஸ்.எம்.இ), சிறு தொழிற்சாலைகள், மைக்ரோ, நடுத்தர அளவிலான வணிகங்கள் அனைத்தும் கூடல் இடைவெளி காரணமாக செயல்பட முடியாததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறு தொழில்கள் பெரும் இழப்பை சந்தித்தபோது
260 பில்லியன்  பொருளாதார ஊக்க நிதியைச் செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது…

வணிகப் பாதிப்பை எதிர்நோக்கியவர்கள் பாதித்த பின்னர் காய்கறிகள் , மீன் போன்றவற்றை ஆன்லைனில் விற்க முனைந்தனர், மற்றவர்கள் தங்கள் மளிகைப் பொருட்களை விற்க ஈ-காமர்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.

ஒரு வகையில், டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையை விரிவு படுத்துவதாகவே இது மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு மின்-அரசாங்கத்தை உருவாக்கும் திட்டங்கள் இருந்தன, ஆனால் சுமார் 34 விழுக்காட்டினர்  மட்டுமே அதை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அதிகமாகப் பின்பற்றவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here