அமெரிக்காவை துரத்தும் துயரம்; 24 மணிநேரத்தில் 2,502 பேர் பலி

வாஷிங்டன்,ஏப்ரல் 30-

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் பலி எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இந்த எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,502 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 61,656 ஆக உள்ளது. இதுவரை 10 லட்சத்து 64 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.

இவற்றில் பாதிப்பு எண்ணிக்கையில் நியூயார்க் (3,06,158 பேர்) மற்றும் நியூஜெர்சி (1,16,264 பேர்) நகரங்கள் முன்னணியில் உள்ளன. இந்நகரங்களில் முறையே 23 ஆயிரத்து 474 மற்றும் 6 ஆயிரத்து 770 பேர் பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here