
வாஷிங்டன்:
அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அம்மாகாண கவர்னர் கிரெட்சன் விட்மர், ஜனாதிபதி டிரம்ப் அறிவுரையையும் மீறி, ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறார்.
அதனால், அம்மாகாண மக்கள், அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்தனர்.
அவர்களில் சிலர் துப்பாக்கிகளை வைத்திருந்தனர். மிச்சிகன் மாகாண சட்டசபை கட்டிடத்துக்குள் அவர்கள் துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அப்போது, கவர்னரின் அவசரநிலையை நீட்டிப்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த தளத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழையாதவாறு போலீசார் பார்த்து கொண்டனர்.