உலக நெருக்கடியின் போது அமெரிக்கா, தனது தலைமை பண்பை முற்றிலும் இழந்துவிட்டதாக முன்னாள் உலக தலைவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். உலக நாடுகளை ஒன்றிணைக்கு அமெரிக்கா, தற்போதையா சூழலில் தன்னுடைய நிலையை மறந்து சீனாவை கடுமையாக சாடி வருவதாக பல முன்னாள் உலகத்தலைவர்கள், மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் அமெரிக்கா தனது தலைமை பண்பை முற்றிலும் இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பிற்கு தலைமைதாங்கி மருந்து கண்டறிதலை முன்னெடுக்கும் ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது.
முன்னதாக, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியை அமெரிக்க நிறுத்துவதாக, அதிர்பர் டிரம்ப் அறிவித்தது பெரும் திகைப்பை உண்டாக்கியது இந்நிலையில், நிபூணர்கள் இதுபோன்ற கருத்தை முன்நிறுத்தியுள்ளனர். வெள்ளிகிழமை அன்று ஐ.நாவின் மீதான வாக்கெடுப்பை அமெரிக்க தடுத்து நிறுத்தியது.
அதேபோல், சீனா மற்றும் உலகசுகாதார அமைப்பின் மீதான கோபத்தின் காரணமாக, ஜி 7 மற்றும் ஜி 20 கூட்டங்களில் உலகளாவிய அமைப்புகளும் அமெரிக்க தடுத்தது குறிப்பிடத்தக்கது.