கோலாலம்பூர், மே. 16-
நிபந்தனைகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக்கட்டுப்பாடு விதிமுறைகளை ஊடகவியலாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தினார்.
செய்தி சேகரிக்க எங்கு, எப்போது சென்றாலும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் இடைவெளியுடன் இருப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
இந்த விதிகள் குறித்து ஊடகவியலாளர்கள் அறிவர். நெருக்கமான இடங்களில் உள்ளே நுழைந்து ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஊடகவியலாளர்களை அழைக்கும் ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு முறையான இட வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும். விதிக்கப்பட்ட விதிகளை மீறாமல் முறையாக செயல்பட வேண்டும் என டத்தோஶ்ரீ இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.