கோவிட் 19 – இன்று 93 பேர் பாதிப்பு

கோவிட் 19 பெருதொற்றுக்கு இன்று 93 பேர் இலக்காகியுள்ளனர்.

அதில் 91 வெளிநாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றாகும். 2 பாதிப்புகள் மட்டுமே மலேசியவர்களுக்கு ஏற்பட்டதாகும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் இஷாம் கூறினார்.

இன்று மொத்தம் 61 பேர் குணமடைந்திருக்கும் வேளையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,531 ஆக பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 7,970 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 1,324 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அறுவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு சுவாச உபகரணங்கள் தேவை படுகின்றது.

13ஆவது நாளாக மரண எண்ணிக்கை 115 ஆகவே நீடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here