ஜாலான் கோம்பாக் பத்து 12 எனும் பகுதியில் வாழும் பூர்வக் குடிமக்களுக்கு தர்மா நியூஸ், பிஎம் சன் அன்ட் பிரதர்ஸ் பத்திரிக்கை முகவர்கள் இணைந்து 1,000 உணவு பொட்டலங்களை வழங்கினர்.

கோவிட் 19 காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இவர்கள் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

ஸ்தாப்பாக்கில் உள்ள ஆயர் பானாஸ் பிபிஆர் அடுக்ககத்தின் குடியிருப்பாளர்களுக்கு இரு முறை உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து இன்று 1,000 பூர்வக் குடி மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.










