கொல்லிமலையில் வெட்டுக்கிளிக் கூட்டம்!: மிளகு கொடிகள் நாசம்

கொல்லிமலையில் மிளகு கொடிகளை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசப்படுத்தின. இவை பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து வந்த வெட்டுக்கிளிகள் என கூறப்பட்டது. பிற மாநிலங்களில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் இங்குள்ள விவசாயிகள் இடத்திலும் உள்ளது.

கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே மரங்களிலும், வேளாண் பயிர்களிலும் வெட்டுக்கிளிகள் இருந்ததால் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here