காலம் மாறிவிட்டது

உணவுக்கடைகளில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் காலம் மலையேறிவிட்டதால் இனி அதற்கு வாய்ப்பே இல்லை. குறிப்பாக இந்திய முஸ்லீம் உணவகங்களில் வெளி மேசைகளில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் கலாச்சாரம் ஒழிந்திருக்கிறது.

இது சரியா தவறா என்பதல்ல பிரச்சினை. இனி, அப்படி நடக்காது என்று ஆகிவிட்டது. கூடல் இடைவெளிக்கு ஏற்றதாக இது அமையவில்லை.

இனியும் அந்தப் பழக்கத்திற்குத்திரும்ப பழக்கம் இடம் கொடுத்தாலும்  சட்டம் அதைத்தடுக்கும் என்கிறார்கள்.

இரவு நேரங்களில் தெருவில் அமர்ந்து பந்தாட்டம் பார்ப்பதெல்லாம் இனி இருக்காது. மாறத்தான் வேண்டும்.

ஆட்டமெல்லாம் வீட்டோடு இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய நிலை. இதனால் சிலருக்குக் கவலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here