82 நாள்களுக்குப் பின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க உற்சாகத்துடன் சென்றனர்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து 82 நாள்களுக்கு பின் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் சனிக்கிழமை மீன்பிடிக்க சென்றனர்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் இன பெருக்க காலமாக கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா நோய்பரவலை தடுக்கும் விதமாக முன்கூட்டியே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு மீன்பிடி தடைக் காலத்தை 47 நாட்களாக குறைந்து ஜூன் 01 ஆம் தேதி முதல் மின்பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.