கொரோனா குமார்

இயக்குநர் கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் அடுத்த படத்திற்கு ‘கொரோனா குமார்’ என பெயர் வைத்துள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ஒரு விஷயம் செய்ய நினைக்கும் முடிவெடுக்கும் போது லாக்டவுன் அறிவிக்கின்றனர்.

அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல உள்ளோம். இப்படத்தில் நல்லதொரு சமூக கருத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படத்தின் புரோமோ வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ஆம் பாகமாக கொரோனா குமார் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. லாக்டவுனுக்கு பின் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here