குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஐவர் கைது

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டிய ஐவரை போலீசார் கைது செய்ததாக ஓசிபி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

அம்மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை தடுப்பு சோதனைகளை போலீசார் மேற்கொண்டனர். அதில் 467 வானகங்கள் சோதனையிடப்பட்டன. குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த ஐவரை போலீசார் கைது செய்தனர்.

 

அதோடு சாலை குற்றங்களுக்காக 22 சம்மன்களும் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here