இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 15,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,10,461 ஆக அதிகரித்துள்ளது. 306 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 13,254 ஆக உயர்ந்துள்ளது. 1,69,451 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,27,756 பேர் குணமடைந்துள்ளனர்.