சுங்கை துவா இந்து ஆலயங்களுக்கு உதவி நிதி

சுங்கை துவா சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் 7 இந்து ஆலயங்களுக்கு சிறப்பு உதவி நிதி வழங்கப்பட்டது.

கோவிட் 19 தாக்கத்தினால் ஆலயங்கள் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது அரசாங்கம் ஆலயங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும் எஸ்ஓபிகளை பின்பற்றியே ஆலயங்களும் பொதுமக்களும் செயல்பட வேண்டும் என்று சுங்கை துவா சட்டமன்ற தொகுதி தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோபிராஜ் காத்தன் கூறினார்.

எனவே, சுங்கை துவா வட்டாரத்தில் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் 7 ஆலயங்களுக்கு கனிசமான உதவி நிதி வழங்கப்பட்டது. ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபிகளை நடைமுறை படுத்த இந்த உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது. செனிடைஸர் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கும் இந்த நிதி உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here