இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலக காசநோய் பாதிப்பில் சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 40 விழுக்காடு  பாதிப்பு ஏற்படுகிறது. காசநோயும்  கொரோனா வைரசை போலவே நோயாளியின் வாய் மூக்கில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகள் படுவதால் மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆனால், தற்போது உலகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால்  காசநோய்க்கான பரிசோதனையும் சிகிச்சையும் குறைந்துவிட்டது. குறைந்த, நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் காசநோய் சிகிச்சை கிடைப்பது இல்லை. இந்த சுகாதார சேவை குறைபாடு காரணமாகவும் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஏற்படும் தாமதம் காரணமாகவும் காசநோய் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.

சீனா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் காசநோய் தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படும். இது, 2 லட்சமாக கூட உயரும். இந்தியாவில் கூடுதலாக 95 ஆயிரம் பேரும் சீனாவில் கூடுதலாக 6 ஆயிரம் பேரும் தென்ஆப்பிரிக்காவில் கூடுதலாக 13 ஆயிரம் பேரும் காசநோய்க்கு பலியாவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here