இங்குள்ள ஜாலான் செந்தூலில் கோலாலம்பூரை நோக்கி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 20 வயது நிரம்பிய இளைஞரை மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இன்று மதியம் ஒரு மணியளவில், ஜாலான் செந்தூல் முட்சந்தியில் உயிரிழந்த நபர் கோலாலம்பூரை நோக்கில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியில் 63 வயது நிரம்பிய பெரியவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வலது பக்கமாக திரும்பியிருக்கிறார். அப்போது இருவருமே இடித்துக் கொண்டுள்ளனர்.
தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பெரியவருக்கும் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.