நான் 9ஆவது பிரதமர் வேட்பாளரா? தீவிரமாக சிந்திக்கிறேன் : ஷாஃபி

கோத்த கினாபாலு: நாட்டின்  9ஆ வது பிரதமர்  வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்ற துன் டாக்டர் மகாதீர் முகமது பரிந்துரை குறித்து தீவிரமாக சிந்திப்பேன் என்று  டத்தோ மொஹமட் ஷாஃபி அப்டால் (படம்) தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தனது சகாக்களுடன் இன்னும் ஆலோசிக்கவில்லை என்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

செம்போர்னா  நாடாளுமன்ற உறுப்பினரான  அவர் இது தனக்குத்தானே தீர்மானிக்கக்கூடிய ஒன்றல்ல என்று கூறினார்.  ஆனால்  நிச்சயமாக சில தீர்க்கமான முடிவினை வழங்குவேன் என்றும் கூறினார். என் பெயர் கூட பரிந்துரைக்கப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்  என்று ஷாஃபி கூறினார். அவர் பிரதமராக இருந்தபோது சபாவுக்கு பல யு-திருப்பங்கள் மற்றும் நிறைவேறாத வாக்குறுதிகளுக்குப் பிறகும் மகாதீரை இன்னும் நம்புகிறீர்களா  என்று கேட்டதற்கு, இது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல என்று ஷாஃபி கூறினார்.

மாநிலத்திற்கும் நாட்டிற்கும்  எது சிறந்தது என்பதை நாம் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்  என்று அவர் கூறினார். ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பார்ட்டி வாரிசன் சபாவின் தலைவரான ஷாஃபி ஒரு மாதத்திற்குள் இன்னும் உறுதியான பதிலை அளிப்பேன்  என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here