கூலிம்,
கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுக்க 108 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட அஷ்ட தீப பூஜை எதிர்வரும் 5-7-2020 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுவதாக ஸ்ரீ பிரபஞ்ச சமுத்திர குருமாதா தெரிவித்தார்.
கடந்த 20ஆம் தேதி மார்ச் மாதம் உலக அளவில் குருமார்கள், மகான்கள், பொதுமக்கள் இருக்கும் அவரவர் இல்லங்களில், மடங்களில், ஆசிரமங்களில் இப்பூஜை தினசரி இரவு 8.௦௦ மணி முதல் 8.30 வரை நடத்தப்பட்டது.
நாட்டில் கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நோய் முற்றாக அழிக்கப்பட வேண்டும், அதே வேளையில் இந்நோயின் பிடியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று இப்பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.
கே. ஆர். மூர்த்தி