பண்டார் பெர்மாய்சூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அருகே உள்ள புதரில் ஒரு மீனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பலியானவர் ஜமாலுடின் யூசோஃப் (39) என அடையாளம் காணப்பட்டார். பெனாரிக், 57ஆவது கிலோ மீட்டரில் மாலை 6.30 மணியளவில் வழிப்போக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக செத்தியூ மாவட்ட காவல்துறை தலைவர் டி.எஸ்.பி அஃபாண்டி ஹுசின் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மற்றொரு வாகனம் மீது மோதியிருக்கலாம் அல்லது சொந்தமாக சறுக்கி விழுந்திருக்கலாம்.
எவ்வாறாயினும், அவரது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதற்கான தடயங்கள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கட்ட விசாரணை நடவடிக்கைகளுக்காக அவரின் உடல் செத்தியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அவர் திங்களன்று (ஜூலை 6) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அஃபாண்டி கூறினார். – பெர்னாமா