குழந்தையின் காதை கிள்ளிய பெண்ணுக்கு 6,000 வெள்ளி அபராதம்

கோலாலம்பூர்: 10 மாத குழந்தையின் காதுகளை கிள்ளிய ஒரு பெண்ணுக்கு 6,000 வெள்ளி அபராதம் மற்றும் மூன்று மாத சிறை தண்டனையை  இங்குள்ள அமர்வு நீதிமன்ற நீதிபதி மஹியோன் தாலிப்  வழக்கில் சம்பந்தப்பட்ட  நோர் அஜியானா ஏ.சமத் (வயது 33)   என்பவருக்கு  விதித்தார்.

அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று நீதிபதி கேள்வி எழுப்பிய நூர் அஜியானா, தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் குழந்தை எப்போதும் அழுவதால் தான் உணர்ச்சிவசப்பட்டு  இருந்ததாலும்  அந்த நேரத்தில் வீட்டில் நீர் விநியோகத் தடை இருந்தது என்றும் கூறினார்.

கடந்த மார்ச் 5ஆம் தேதி  மதியம் 2 மணியளவில் வாங்சா மாஜு தாமான் மெலாவதியில் உள்ள ஒரு வீட்டில், தனது அண்டை வீட்டு குழந்தையை கிள்ளியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (அ) இன் கீழ் இந்த குற்றச்சாட்டு  பதிவு செய்யப்பட்டிருந்து. இது அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனை விதிக்கப்படும். துணை அரசு வக்கீல் நூர்லியானா முகமட் ஜாஃப்ரி வழக்கில் ஆராஜானார். அதே நேரத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட அப்பெண் சார்பாக யாரும் வாதிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here