மின்கழிவுகள், ஓர் எச்சரிக்கை!

மின்னணுக் கழிவுகளை  மலேசியாவிற்குள் (இ-கழிவு) சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கான  அமலாக்கத்தை வலுப்படுத்துவது முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மின் கழிவுகளைக் கையாளும் நிறுவனங்கள் அதிக பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் பெறாத தரப்புகளிடமிருந்து சரக்குகளைப் பெறக்கூடாது, அல்லது அவர்களுடன் எந்தவொரு வணிக பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

சட்டவிரோதமாக மின் கழிவுகளை இறக்குமதி செய்வது தொடர்பான அறிக்கைகளை அதிகாரிகள் ஆராய்ந்து, சட்டத்தை இன்னும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சஹாபாட் ஆலம் மலேசியாவின் (எஸ்ஏஎம்) செயலாளர் எஸ்.மகேஸ்வரி கூறினார்.

அமெரிக்காவிலிருந்து மின் கழிவுகள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளை அவர் குறிப்பிடுகிறார்.

சட்டவிரோதமாக மின் கழிவுகளை இறக்குமதி செய்வது குறித்து சுற்றுச்சூழல் துறை எஸ்.ஏ.எம்.

இ-கழிவுகளை எவ்வாறு கையாள்வது என்பதில் மலேசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றும்  மாகேஸ்வரி சுட்டிக்காட்டினார்.

இந்த கட்டுப்பாடுகள், கூறப்பட்ட சரக்குகளின் இறக்குமதியாளர்களால் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், இதுதொடர்பினான பாசல் மாநாட்டை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை  என்றார் அவர்.

இந்த மாநாடு சர்வதேச எல்லைகளில் அபாயகரமான கழிவுகளை இடம் மாற்றுவதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இத்தகைய கழிவுகளை வளம் குன்றிய  நாடுகளுக்கு மாற்றுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த குறிப்பிட்ட வழக்கில், இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர் இருவரும் கழிவு மேலாண்மை தொடர்பான நெறிமுறை வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டதாக மாகேஸ்வரி சாடினார்.

அத்தகைய நிறுவனங்கள் பின்பற்ற சில விதிகள் உள்ளன. எவ்வாறாயினும், சுங்கத்துறை சில நேரங்களில் முறையான் விதிகளுகுட்ட்பட்ட மேற்பார்வை செலுத்தத் தவறுவதால் கழிவுப் பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும்  அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here