தாங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதம், 12 முதல் 14ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக ரஷ்யா நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்
இந்த பல்கலைக்கழகம், சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஆம்.. கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய விஞ்ஞானிகள் குழு அறிவித்தது.