பெற்றோரின் அதிகப்படியான அர்ப்பணிப்பு குழந்தைகளை புறக்கணித்துவிட்டது, இதனால் அவர்கள் எதிலும் ஆர்வமின்மையோடு இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
ஊதியக் குறைப்புகள் , வேலை இழப்புகள் , கூடுதல் வருமானம் தேட அதிக நேரம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கோவிட் -19 தொற்றுநோயால் இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது.
ஓர் உளவியலாளரான பேராசிரியர் டாக்டர் மரியானி நூர் கருத்துப்படி இறுதியில், அவர்கள் மிகவும் மதிப்புமிக்க உடைமையான தங்கள் குழந்தைகள் மீதான பார்வையிலிருந்து விடுபட்டவர்களாகின்றனர் என்கிறார்.
எல்லா நேரத்திலும் (அலுவலகத்தில்) பிஸியாக இருப்பது தற்பெருமை பேச வேண்டிய ஒன்றல்ல. இது அவர்களின் குழந்தைகளின் இரண்டாம் நிலை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பின் தங்கிவிடுகிறார்கள்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெருமை, மகிழ்ச்சி, என்று தங்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை வளர்க்க உதவுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உணவு, தங்குமிடம், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வது முக்கியமானது என்பதை மரியானி கூறினார், பெற்றோர்களும் அன்பு, கவனம், பாராட்டு, ஒப்புதல் ஆகியவற்றிற்கான அவர்களின் இரண்டாம் தேவைகளை உணர்ந்து அவர்களின் முன்னுரிமைகளை சரியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
இது குழந்தைகள், குறிப்பாக இளம்வயதினர் வெளிப்படுத்தும் எதிர்மறையான சமூக தாக்கத்தை தடுக்க உதவும்.
பெற்றோர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அஞ்சத் தொடங்கியதால், சமீப காலங்களில் இந்த பிரச்சினை மிகவும் தீவிரமாகிவிட்டது என்று அவர் கூறினார்.
பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது, அவர்கள் தங்கள் குழந்தைகளின் முதன்மைத் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். இது உணவு , பொருள் தேவைகள் என்று அவர் கூறினார்.
ஆனால், ஒரு தொழிலில் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பது குழந்தையுடன் பற்றின்மைக்கு வழிவகுக்கும். அப்பபிள்ளைகள் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பினாங்கு நகரில் 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக ஓர் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
மூன்று மகள்களில் மூத்தவள், அவள் வேலை செய்யும் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வரத் தவறியதால், சிறுமியின் பிறந்தநாள் விழாவை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மலேசியர்கள் தங்கள் குழந்தைகளை இழப்பதை விட வேலையை இழப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்றும் இது மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்த ஒரு வலுவான குடும்ப பிரிவு அவசியம் என்று அவர் விளக்கினார்.
வார இறுதி நாட்களை குழந்தைகளுடன் செலவழிக்க வேண்டும், அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.