பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் போதைப்பொருள் நபர் கைது

உள்ளூர் நபரை போலீசார் கைது செய்து, வெ100,000 மதிப்புள்ள பல்வேறு வகையான போதை மருந்துகளைப்  பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையினர், 37 வயது நபரை இரவு 11.20 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஜாலான் ஸ்டேஷன் சென்ட்ரலில் கைது செய்தனர்.

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோஶ்ரீ மஸ்லான் லாசிம் இது பற்றிக் கூறுகையில், 103.7 கிராம் எடையுள்ள இரண்டு பாக்கெட் மெத்தாம் பெத்தமைன், கார் கொத்து சாவிகளைப் போலீசார் கைப்பற்றியதாகச் சொன்னார்.

விசாரணைக்குப்பின் அந்நபர் ஜாலான் ஸ்டெசன் சென்ட்ரலில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் அறைக்கு  போலீசாரை அழைத்துச் சென்றார்.

ஹோட்டல் அறையில் மெத்தாம் பெத்தமைன் (2,242 கிராம்), எக்ஸ்டஸி மாத்திரைகள் (104.3 கிராம்), எரிமின் 5 மாத்திரைகள், (5.1 கிராம்)  ஆர்எம் 112,720 மதிப்புள்ள கஞ்சா, (8.4 கிராம்) ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மெத்தாம் பெத்தமைன் உபயோத்ததில் அந்நபர் நேர்மறையாக இருந்தார் என்ற குற்றமும்  அந்நபருக்கு ஒரு குற்றப் பதிவும்  இருந்ததாக அவர் கூறினார்.

சந்தேகநபர் தற்போது ஜூலை 17 முதல் ஏழு நாட்களுக்குத்தடுத்து வைக்கப்பட்டுள்ளார், மேலும் இந்த வழக்கு 1952 இன் ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 39 பி , பிரிவு 15 (1) (அ) இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here