சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்து மக்களுக்கு சேவையாற்றி வந்த மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வடசென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் கடந்த 1973ஆம் ஆண்டு தனது மருத்துவ சேவையை தொடங்கிய மருத்துவர் திருவேங்கடம் ரூ.2க்கு சிகிச்சை அளித்து வந்தார். அதனால் ஏராளமான மக்கள் குறைந்த சிகிச்சையில் பயன்பெற்றனர்.
இதனால் “5 ரூபாய் டாக்டர்” என அவர் அழைக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவர் திருவேங்கடம் நேற்று காலமனார்.
இவரது மறைவுக்கு முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
துணை முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “1973ஆம் ஆண்டில் 2 ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.