பிரேசிலை உலுக்கும் கொரோனா – 38 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

ரியோ டி ஜெனிரோ:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 860-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 29.7 லட்சத்தை கடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here