சீனாவில் ரெஸ்டாரண்ட் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

சீனாவில் இரண்டு மாடி ரெஸ்டாரண்ட் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள சியாங்பென் கவுண்டி பகுதியில் விருந்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மாடிகள் கொண்ட ரெஸ்டாரண்ட் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது ரெஸ்டாரண்டில் மொத்தம் 45 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில், 17 பேர் இறந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 21 பேர் குறைவான காயங்களுடன் தப்பியதாகவும் அங்குள்ள சின்ஹுவா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையில் 700 பேர் ஈடுபட்டதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here