சிலியில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் செவ்வாய்க்கிழமை காலை (இந்திய நேரப்படி) 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில்,

சிலியில் திங்கள்கிழமை இரவு (சிலி நேரப்படி) 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது சிலி தலைநகர் சாண்டியாகோவிலிருந்து 607 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதுவரை, சொத்து சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

சிலி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்ற பகுதியில் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பால் பாதிப்புக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here