கொரோனா பாதிப்புக்கு இடையே அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற இந்ததொடரில், பங்கேற்கும் வீரர்கள் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி வருவதால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், ஏஞ்சலிக் கெர்பர் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பா நடைபெற்ற இந்த ஆட்டத்தில் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் வான்ட்ரோசோவா (செக்குடியரசு), கிறிஸ்டினா மாடினோவிச் (பிரான்ஸ்), கிராசெவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.