கன்னியாகுமரி மாவட்டம் அருமனை, இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன்(60). இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சீட்டு விளையாட்டில் சிறு குளறுபடி ஏற்பட அவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகியுள்ளது. எனினும் நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து விளையாடியுள்ளனர்.
அவ்வப்போது வாக்குவாதம் எழுந்தநிலையில் ஒருகட்டத்தில் திடீரென மோதல் ஈடுபட்டனர். அப்போது நண்பர்கள் ஜெயபிரகாஷ்(50), மெரிலின் ஜோஸ்(45) ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் சுசீந்திரன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெயபிரகாஷ் மற்றும் மெரிலின் ஜோஸ் ஆகியோரை தேடி வருகின்றனர். அப்போது அங்கு சுசீந்திரன் உறவினர்கள், கிராமத்தினர் திரண்டதால் பதற்றமான சூழல் உருவானது.