நாட்டின் 8 ஆவது பிரதமராக பதவியேற்க டான் ஸ்ரீ முஹைதீன் யாசினுக்கு ஆதரவாக, சட்டப்பூர்வ அறிவிப்பில் கையெழுத்திட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆவார் என்று பெரிக்காத்தான் நேஷனல் நிர்வாகத்தின் அரை ஆண்டு மாநாட்டில் டான்ஶ்ரீ முஹிடீன் யாசின் தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்டுவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எஸ்.டி.யில் கையெழுத்திட அவர்கள் அரண்மனைக்கு அல்-சுல்தான் அப்துல்லாவால் அழைக்கப்பட்டனர், அதன்போது எஸ்டியில் கையெழுத்திட்டவர் ஹாஜி ஹாடி என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.
.கடந்த பிப்ரவரியில், பிரதமராக நியமிக்க பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட அவர்களில் ஒருவரை அடையாளம் காண, 222 எம்.பி.க்களிடையே நேர்காணலை நடத்த அவரது மாட்சிமை ஒப்புக் கொண்டது.
தனிப்பட்ட முறையில், நான் பிரதமராக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருவரைப் பொறுப்பேற்கவோ அல்லது கவிழ்க்கவோ அசாதாரண அரசியல் திட்டம் எதுவும் இல்லை, ஆனால், அது ஒரு அரசியல் நெருக்கடியால் நடந்தது, அந்த நேரத்தில் அது மிகவும் முக்கியமானதாக இருந்தது, இது நாம் அனைவரும் அறிந்ததே என்று அவர் கூறினார்.
எனினும், விரும்பியபடி என்னால் செய்ய முடியும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. எந்தவோர் அறிக்கையும் மக்களுக்கு ஒரு பொறுப்போ அல்லது பொறுப்புக்கூறலோ இல்லை என்று அர்த்தமல்ல. ஒரு தலைவராக நான் இன்னும் பொறுப்புணர்வை நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பொதுத் தேர்தலின் விளைவாக பி.என் அரசாங்கம் உருவாக்கப்படவில்லை, ஆனால், அது மத்திய அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையில் அமைந்தது என்று பிரதமர் கூறினார்.
எனவே, தேர்தல் பிரச்சாரங்களின் போது மக்களுக்கு பொதுவாக வழங்கப்படும் எந்தவொரு அறிக்கையும் வாக்குறுதியும் பி.என் அரசாங்கத்திடம் இல்லை என அவர் மேலும் கூறினார்.