மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு வாரிய ஊழியர் சங்கம் (எம்.டி.பி.பி ஊழியர் சங்கம்), கியூபாக்ஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் சுற்றுலா மலேசியா பிரச்சாரத்துடன் இணைந்து அரசு ஊழியர்களுக்கான சிறப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது.
இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) காலத்திற்குள் உள்நாட்டு சுற்றுலாத் துறையின் மேம்பாட்டை மேலும் அதிகரிக்கும் முயற்சியில், குறுகிய கால மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தத்திட்டம் அரசு ஊழியர்கள் வழங்கும் முயற்சிகள், சேவைகளைப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சர் டத்தோஶ்ரீ நான்சி சுக்ரி கூறுகையில், சுற்றுலா மலேசியா சுற்றுலா முகவர், ஹோட்டல், பயண நடத்துநர்கள் உள்ளிட்ட தொழில்துறையாளர்களை அணிதிரட்டியுள்ளது.
இந்த தொகுப்பு திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் தனது உரையில் கூறினார்.
பங்கேற்கும் 11 ஏஜென்சிகள் விடுமுறை விளம்பரங்களான 3 நாட்கள் 2 இரவுகள் , 2 நாட்கள் 1 இரவு விடுமுறை திட்டத்தில், நகர மையத்தைச் சுற்றியுள்ள 5, 4 நட்சத்திர ஹோட்டல்களைக் கொண்டுள்ளன,. சிலாங்கூர் கெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்ல ஒரு நபருக்கு RM120 வரையில் குறைந்த விலையில் உள்ளது.
தங்குமிட வசதிகளுக்கு மேலதிகமாக, அரசு ஊழியர்கள், நாள் அல்லது 30 சதவிகிதம் வரை தள்ளுபடியுடன் சுற்றுலாப் அற்புதமான சுற்றுப்பயண அனுகூலங்களை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.
இலவச 5,000 கோலாலம்பூர் நகர சுற்றுப்பயணம் , பஸ் டிக்கெட்டுகள், ஹோட்டல் தங்குமிடங்கள் நுழைவுச் சீட்டுகள் ஆகியவைகளுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியுடன் கூடுதல் மதிப்புச் சலுகைகளும் உள்ளன.
2020 செப்டம்பர் 30 வரை முன்பதிவு செய்யலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் 2020 டிசம்பர் 31 வரையும் உள்ளது. அதைப் பெற, அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்களில் பொது சேவைத் துறையில் தங்கள் வேலைவாய்ப்பைக் குறிக்கும் பாஸ்களை மட்டுமே காட்ட வேண்டும்.
பொதுச் சேவையில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பெஞ்சனா தூண்டுதல் தொகுப்பின் கீழ் 2021 டிசம்பர் 31 வரை உள்நாட்டு பயணச் செலவுகளுக்காக RM1,000 வரை தனிநபர் வரி நிவாரணம் உண்டு. சுற்றுலா பற்றிய கூடுதல் தகவலுக்கு, சுற்றுலா மலேசியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.malaysia.travel ஐப் பார்வையிடவும்.









