டிக்-டாக் செயலிக்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை

டிக்-டாக் உள்ளிட்ட பல செயலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அவற்றுக்கு இந்தியா தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஜனாதிபதி டிரம்புக்கு கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது அந்த செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார். இந்தநிலையில் டிரம்ப் விதித்த காலக்கெடு இன்னும் சில தினங்களில் முடிய இருக்கும் நிலையில் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கான எந்த உடன்பாடும் இதுவரை ஏற்படாததால் காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டிக்-டாக் செயலிக்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here